பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் கடந்த, 5ஆம் தேதி ஏற்றப்பட்டது, தொடர்ந்து, 11 நாட்கள் ஏற்றப்பட்டு எரிந்து வந்த மஹா தீபம் நேற்றுடன் நிறைவடைந்தது.
அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 5ம் தேதி மஹா தீபம், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது ஏற்றப்பட்டது. தீபம் தினசரி மாலை, 6மணிக்கு ஏற்றப்பட்டு மறுநாள் காலை, 6 மணிக்கு குளிர்விக்கப்படும். இவை தொடர்ந்து, 11நாட்கள் எரியும். இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் மாலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், மலை தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை தீபம் ஏற்றப்படும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலும், கிரிவலப்பாதையிலும் நின்று தரிசனம் செய்தனர். பகலில் மலையை சுற்றி மேகங்கள் திரண்டாலும், மாலை, 6 மணி அளவில் மேகங்கள் இல்லாமல் தீபம் ஏற்றுவது தெளிவாக தெரிந்தது. 11வது நாளான நேற்றுடன் தீபம் ஏற்று நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து அதில் உள்ள தீப மை சேகரிக்கப்பட்டு வரும், 5ம் தேதி ஆருத்ரா தரிசன நாளில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.