ஜன., 28 ல் கொடியேற்றம்: பிப்.,3 ல் தேரோட்டம்; பழநியில் தைப்பூச விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 03:12
பழநி : பழநி தைப்பூச திருவிழா ஜன.,28 முதல் பிப்.,6 வரை நடைபெற உள்ளது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,28ல் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கி தொடர்ந்து 10 நாட்கள்(பிப்.,6) நடக்கிறது. மார்கழி பிறப்பை முன்னிட்டு இன்று முதல் மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்.,2 லும், திருத்தேரோட்டம் பிப்.,3 லும் நடக்கிறது. விழாநாட்களில் முத்துகுமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் யானை, குதிரை, மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.