பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும், ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ஆருத்ரா தரிசனத்தின் போது கோயில் நடை திறப்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மார்கழி மாத மாற்றம்: டிச., 16 , மார்கழி 1 முதல், ஜன., 14, மார்கழி 30 ம் தேதி வரை கோயில் நடை திறப்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 க்கு தீபாரதணை,5 க்கு திருப்பள்ளி எழுச்சி,6முதல் 7 க்குள் காலசந்தி தீபாரதணை,7.30 க்கு உச்சிகால அபிஷேகம்,பிற்பகல் 3.30 க்கு சாயரட்சை, மாலை 6 க்கு ராக்கால அபிஷேகம்,6.45 முதல் 7 க்குள் தீபாரதணை, 8 க்கு பள்ளியறை தீபாரதணைக்குப்பின் கோயில் திருகாப்பிடப்படும்.
புத்தாண்டு, பொங்கல்: இந்த இரு தினங்களும் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும்.1.30 க்கு விஸ்வரூப தரிசனம்,4 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும். ஆருத்ரா தரிசனம்: ஆருத்ரா தரிசன தினமான ஜன., 5 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படும். 2.30 க்கு விஸ்வரூப தரிசனம், 3 க்கு அபிஷேகம், மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.