சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம் நடந்தது.
புனிதநீர் நிரம்பிய சங்குகள் மூலம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை அம்மனுக்கு சங்காபிஷேகம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் தனபாலன் முன்னிலை வகித்தார். இதன் பின் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சி ஆனந்த மீனாட்சி சமேத அமுதலிங்கேஸ்வரர் சிவன் கோயிலில் சோமாவரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரவி அர்ச்சகர், கோயில் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டனர். சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சுவாமி அம்மாளுக்கு சிறப்புபூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன் செய்தார்.