ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர் ஜெயபால், சத்ரு சம்ஹாரம் மற்றும் சண்டி யாகம் நடத்தினார். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெ., விடுபட்டு, மீண்டும் முதல்வராக வேண்டி, நாகை மாவட்டம் குத்தாலத்தில், 1,200 ஆண்டுகள் பழமையானதும், அக்னி பகவான், ஆஞ்சநேயர் பூஜித்த தலமுமான சவுந்திரநாயகி சமேத சோழீஸ்வர சுவாமி கோவிலில், அமைச்சர் ஜெயபால் சத்ரு சம்ஹாரம் மற்றும் சண்டி யாகம் நடத்தினார். - நமது நிருபர் -