பதிவு செய்த நாள்
23
டிச
2014
01:12
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். இரவு, 12:00 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு, 1:00 மணி வரை நடந்த ஊஞ்சல் தாலாட்டில், கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள், பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். செஞ்சி டி.எஸ்.பி., தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.