செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அ ங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு அன்ன தானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, வான வேடிக்கை நடந்தது. இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.