பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பெ ாள்ளாச்சியில் உள்ள ரோமன் கத்தோலிக், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே மற்றும் பிராட்டஸ்டண்ட் உள்ளிட்ட கிறிஸ்துவ பிரிவுகளின் ÷ தவாலயங்களில் கடந்த ஒரு வார காலமாகவே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கிறிஸ்துவ மக்களின் வீடுகளிலும் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட தடபுடல் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மேலும், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டன. பண்டிகைக்காக வெளியூர்களில் பணியாற்றி வரும் கிறிஸ்தவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி னர். நேற்று மாலை முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்ட துவங்கின. நகரின் வீதிகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந் தவரை இசை மற்றும் பாடல்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இரவு 9.00 மணி முதலே சர்ச்களில் மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. 11.00 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்தது. முன்னிரவு முதல் தொடர்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ‘இக்கொண்டாட்டம் இன்று முழுக்க தொடரும்; வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறப்பு வரை பண்டிகை கொண்டாட்டங்கள் இருக்கும்’ என கிறிஸ்துவ மக்கள் தெரிவித்தனர். வால்பாறை ண கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ., ஆர்.சி., சென்லுக், கருமலை மாதா ஆலயம், ரொட்டிக்கடை புனிதவனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை சிறப்பு ஜெபவழிபாடும், சிறப்பு பாடற்பலியும் நடக்கிறது. இதையொட்டி, நகரில் உள்ள சர்ச்களில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளில் ஸ்டார் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அனைத்துசர்ச்களும், மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.