தியாகதுருகம்: குடியநல்லூர் கிராமத்தில் சிவன், பெருமாள், செல்லியம்மன் கோவில்கள் பக்தர்கள் முயற்சியால் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தியாகதுருகம் அடுத்த குடியநல்லூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர், வரதராஜபெருமாள், செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் முயற்சி எடுத்தனர். நிதி சேகரித்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு திருப்பணி துவங்கி தொடர்ந்து நடந்தது. சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது. இதன் ராஜகோபுரம், விமானம் புதுப்பிக்கப்பட்டது. இங்கு 10 அடி உயர ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டது. முகப்பு வாசலில் சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டு புணரமைப்பு செய்தனர். அதேபோல் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோவி லுக்கு வண்ணம் பூசும் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. நூற்றாண்டு பழமையான 3 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, வரும் தை மாதம் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.