பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
திருப்பதி: சர்வரில் பழுது ஏற்பட்டதால், 300 ரூபாய், சிறப்பு தரிசன, டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல், திருமலை பக்தர்கள் அவதிப்பட்டனர். வைகுண்ட துவாதசி தினத்தன்று, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, 10 ஆயிரம் டிக்கெட்டை, நேற்று, இணையதளம் மூலம் வழங்கியது.இதற்காக, நேற்று, காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள், தேவஸ்தான இணையதளத்தில், முன்பதிவு செய்ய முயன்றனர். ஒரே நேரத்தில், 1.20 லட்சம் பேர் இணையதளத்தில், தொடர்பு கொண்டதால், சர்வரில் பழுது ஏற்பட்டு நான்கு மணி நேரம் வரை, முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நிபுணர் குழு, சர்வர் பழுதை சரி செய்ததை அடுத்து, சிறப்பு தரிசன டிக்கெட்டைமுன்பதிவு செய்தனர்.