பதிவு செய்த நாள்
26
டிச
2014
12:12
கோபி: கோபி, மொடச்சூரில் பிரசித்தி பெற்ற, தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இங்கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடக்கும். நடப்பாண்டில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, பத்தாம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 22ம் தேதி இரவு சந்தனக்காப்பு, 24ம் தேதி காலை மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, அம்மை அழைத்தல் முடிந்து, திருக்கொடி ஏற்றப்பட்டு, பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, தலைமை பூசாரி காலை, 7.40 மணிக்கு குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து, பக்தர்கள் அக்னி சட்டியுடன் குண்டம் இறங்கினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.இதேபோல் கொளப்பலூர் அம்மன் கோவில்பதியில் உள்ள பச்சை நாயகி அம்மன் கோவிலும், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.