பதிவு செய்த நாள்
26
டிச
2014
04:12
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி சமேத சீனிவாசபெருமாள்கோவில் உள்ளது. புகழ்பெற்ற, 108 வைணவ தலங்களில், 20வது தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் நாற்பதில், 14வது தலமாகவும் விளங்குகிறது.
மணிமுத்தா நதி தீரத்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவருக்கு சிறு கன்னியாக வந்து அவதரித்த வஞ்சுளவல்லி தாயாரை, மானிட உருவத்தில் வந்து மனம்கொண்ட சீனிவாசபெருமாள் அதே கோலத்தில் காட்சியளிக்கும் தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியது. முன்னதாக பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றுவிழா நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.