பதிவு செய்த நாள்
27
டிச
2014
10:12
திருப்பதி: திருமலையில், எட்டு நாட்களுக்கு, வி.ஐ.பி., தரிசனத்தை, தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர். பள்ளிகளில், அரையாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால், நேற்று முதல், ஜன., 2ம் தேதி வரை, எட்டு நாட்களுக்கு, வி.ஐ.பி., தரிசனத்தை, தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். ஆனால், புரோட்டோகால் பிரிவின் கீழ்வரும், வி.ஐ.பி.,க்கு மட்டும் நாள்தோறும், குறிப்பிட்ட அளவில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். ஜன., 1, 2ம் தேதிகளில், திருமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிழற்குடைகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், குடிநீர், உணவு, பால் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
புதிய உபகரணம்: திருமலை ஏழுமலையான் கோவில், லட்டு பிரசாதம் தயாரிக்கும், மடப்பள்ளியில் பொருத்த, புதிய உபகரணம் வாங்கப்பட்டு உள்ளது. இதை நேற்று, கோவிலின் உள்பகுதியில் உள்ள, மடப்பள்ளியில் பொருத்தி, அதிகாரிகள் சோதனை செய்தனர்.