பதிவு செய்த நாள்
29
டிச
2014
11:12
மதுரை :மதுரை
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.,4 நள்ளிரவு
முதல் ஜன.,5 வரை அபிஷேகம் நடக்கிறது.
கோயில் இணை கமிஷனர் நடராஜன்
கூறியதாவது: இக்கோயிலில் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து
உற்சவர் திருமேனிகள் (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை,
சித்திரசபை) உள்ளன. பஞ்ச சபைக்கும் தனித்தனி உற்சவ திருமேனிகள் உள்ளன. பஞ்ச
சபை கொண்ட இக்கோயிலில் நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்),
சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள்,
சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில் எழுந்தருளியும், இதர நான்கு சபை நடராஜர்,
சிவகாமி அம்மன் நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தும், ஏக
காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கிறது.
தொடர்ந்து
கால பூஜைகள் முடிந்து காலை 7 மணியளவில் பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜன்,
சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேத்தியாகும்.
பக்தர்கள், சேவாத்திகள் ஆகியோர் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர்,
நெய், தேன், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப்
பொருட்களை ஜன.,4 மாலை முதல் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என்றார்.