விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் ஏழைமாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை பெருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 4:05 மணிக்கு கணபதி ஹோமம், 8:05 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மதியம் 12:05 மணிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை பழனி சூரிகுருசாமி செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.