பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நெய் விளக்கு ஏற்றி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
*ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம்: மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயி ல் பூஜாரிகள் செய்திருந்தனர்.
* நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் செண்பகவல்லியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரமும், அர்ச்சனைகளும் நடந்தன. விநாயகர், முருகன், நவக்கிரங்கள், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனைகள் நடந்தன.
*திருமலைக்கேணி முருகன் கோயிலில் விநாயகர், சுப்பிரமணியசுவாமிக்கு மவுனகுரு காமாட்சி பீடத்திலும் சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரமும், அர்ச்சனைகளும் நடந்தன. திண்டுக்கல், நத்தம்,கோபால்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.
*கணாய்பட்டி கருப்பணசுவாமி கோயிலில் விநாயகருக்கும் ,கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரமும், அர்ச்சனைகளும் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
*கணவாய்பட்டி சிவன் கோயிலில் சிவன், நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,மலர்களால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.
வத்தலக்குண்டு: புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடந்தது.
முத்துமாரியம்மன், காளியம்மன், விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தோமையார் சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் உதவி பாதிரியார்கள் பிரபு, ரெக்ஸ்பீட்டர் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. வெங்கடாஸ்திரிகோட்டை, மரியாயிபட்டி, சின்னுபட்டி, மேலக்கோயில்பட்டி மக்கள் பங்கேற்றனர்.
*சி.எஸ்.ஐ., சர்ச்சில் பாதிரியார்கள் ஹென்றிஜோஸ் எல்யூட் இன்பராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, தேவதானப்பட்டி பகுதியினர் பங்கேற்றனர்.