Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானீஸ்வரர் கோவிலில் பக்தி பரவசத்தில் தேர் இழுத்த தோடரின மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
12:01

ஊட்டி : ஊட்டி பர்ன்ஹில் பவானீஸ்வரர் கோவிலின், 114ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவில், தோடரின மக்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் தேர் இழுத்து வழிப்பட்டனர்.  நீலகிரி மாவட்டம், ஊட்டி- எம்பாலடா செல்லும் சாலையில் பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பவானி நதி தீர்த்தத்தில் அமைந்திருப்பதால், பவானீஸ்வரர் கோவில் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.கடந்த, 1910ம் ஆண்டு முதல் இந்த கோவிலில் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நடப்பாண்டுக்கான ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது, விழாவை முன்னிட்டு, நேற்று தேர் ஊர்வலம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பவானீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த தேர் ஊர்வலம் பவானீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி, ஊட்டி மத்திய பஸ்நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, வேணு கோபால்சாமி கோவில், மணிக்கூண்டு, லோயர் பஜார், சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக மீண்டும் பவானீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.முன்னதாக, தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியுடன் வந்தனர். இது குறித்து தோடரினத்தை சேர்ந்த சத்தியராஜ் கூறுகையில்,""ஊட்டியில் இன்று நடக்கும், 114வது ஆண்டு விழாவில், தோடரின மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தோம். இதுவும் எங்கள் மக்களின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும், என்றார்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர், நீலகிரி மலை வாழ் தோடர் இன மக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar