பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் விசாக திருவிழா மற்றும் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள்பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் சிறப்பு பூஜை வழிபாடும் நடந்தது. மேல சங்கரன்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இலஞ்சி குமாரர் கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தோரணமலை முருகன் கோயில், ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.