Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகர்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் ... குறுக்குத்துறை கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி பகுதி கோயில்களில் விசாக திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2011
11:06

தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் விசாக திருவிழா மற்றும் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள்பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் சிறப்பு பூஜை வழிபாடும் நடந்தது. மேல சங்கரன்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இலஞ்சி குமாரர் கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தோரணமலை முருகன் கோயில், ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar