விருத்தாசலம்: விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மார்கழி மாத பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, ஆண்டாள் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.