Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் பாதம் கோவிலில் சுற்றுச்சுவர் ... பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா கோலாகலம்! பாரியூர் கொண்டத்து காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமாரியம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததா? பக்தர்கள் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2015
11:01

சேலம் : சேலம், களரம்பட்டி நேரு நகரில் மகாமாரியம்மன் கோவிலில், அம்மனின் ஐம்பொன் விக்ரகம் கண் திறந்ததாக செய்தி பரவியதை அடுத்து, சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Default Image
Next News

சேலம், களரம்பட்டி, நேருநகர் மெயின் ரோட்டில், மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தினம் தோறும் காலையும், மாலையும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவிலின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், கோவிலின் உள்ளே இரண்டு பெண்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.ஆனால், சிறுவர்களின் தகவலை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று காலை, கோவிலின் பூஜாரி கந்தன், பூஜை செய்ய கோவிலுக்கு சென்று பார்த்தபோது, மூலவிக்ரகம் அம்மனின் கண்களில் கறுப்பு மை போல் காணப்பட்டது.இது குறித்து பூஜாரி, தர்மகர்த்தா கிருஷ்ணசாமிக்கு தகவல் கொடுத்தார். அதை அடுத்து, கிருஷ்ணசாமி தலைமையில் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.கோவில் மூல விக்ரகத்தில் உள்ள அம்மன் சிலை ஐம்பொன்னால் ஆனது. அவை, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், அதில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதனை அம்மன் கண் திறந்து விட்டதாக செய்தியை பரப்புகின்றனர் என, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.சேலத்தில் அம்மன் கண் திறந்ததாக, நேற்று மாலை பரவிய செய்தியால், களரம்பட்டி பகுதி மக்கள் மட்டுமின்றி, பிற பகுதி மக்களும், மகாமரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar