வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2015 11:01
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் ராப்பத்து 8ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து 8ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணியளவில் உற்சவர் பெருமாள் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.