கம்மாபுரம்: தனுர் மாத சஷ்டி திதியையொட்டி, கம்மாபுரம் பகுதியில் உள்ள முருகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கம்மாபுரம் அடுத்த சி.கீரனுõர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், தனுர் மாத சஷ்டி திதியையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னப்படையல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், கம்மாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.