பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழா, (16ம் தேதி) துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம் நாளை (16ம் தேதி) காலை, 5:30 மணிக்கு, த்வஜாரோஹணத்துடன் துவங்குகிறது. அன்று காலை, 7:00 மணிக்கு, தங்க சப்பரம் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, காலை, மாலை வீரராகவ பெருமாள் பல்வேறு அவதாரங்களில், வரும் 25ம் தேதி வரை, 10 நாட்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு, கருட சேவையும், 22ம் தேதி காலை, 7:30க்கு தேரோட்டமும் நடக்கிறது.
நிகழ்ச்சி விவரம்
நாள் நேரம் உற்சவம்
ஜன., 16 காலை 7:00 மணி தங்க சப்பரம் இரவு 7:00 மணி சிம்ம வாகனம்
ஜன., 17 காலை 7:30 மணி ஹம்ச வாகனம் இரவு 7:00 மணி சூரிய பிரபை
ஜன., 18 காலை 5:00 மணி கருட சேவை காலை 7:00 மணி வீதி புறப்பாடு
இரவு 8:00 மணி ஹனுமந்த வாகனம்
ஜன., 19 காலை 7:00 மணி சேஷ வாகனம் இரவு 7:00 மணி சந்திரபிரபை
ஜன., 20 அதிகாலை 4:00 மணி நாச்சியார் திருக்கோலம் காலை 5:00 ரத்னாங்கி சேவை, இரவு 10:00 மணி யாளி வாகனம்
ஜன., 21 காலை 6:00 மணி சூர்ணாபிஷேகம் காலை 7:00 மணி வெள்ளி சப்பரம், இரவு 7:00 மணி யானை வாகனம்
ஜன., 22 காலை 5:00 மணி தேருக்கு எழுந்தருளல், காலை 7:30 மணி தேர் புறப்பாடு, மாலை 5:30 மணி தேரிலிருந்து எழுந்தருளல், இரவு 10:30 மணி கோவிலுக்கு எழுந்தருளல்
ஜன., 23 மாலை 3:00 மணி திருப்பாதம் சாடி திருமஞ்சனம், இரவு 8:30 மணி குதிரை வாகனம்
ஜன., 24 காலை 5:00 மணி ஆள்மேல் பல்லக்கு, காலை 10:30 மணி தீர்த்தவாரி, இரவு 7:30 மணி விஜயகோடி விமானம்
ஜன., 25 காலை 11:00 மணி த்வாதச ஆராதனம், இரவு 8:00 மணி வெட்டி வேர் சப்பரம், இரவு 10:30 மணி த்வஜ அவரோஹணம்.