பதிவு செய்த நாள்
17
ஜன
2015
01:01
கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த ஏகாதச ருத்ராபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான உத்ராயண புண்யாகாலம் தை முதல் நாளான நேற்று முன்தினம் துவங்கியது. நற்காரியங்கள் சிறந்த காலமான புண்யகாலம் துவக்கத்தையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் ஏகாதச ருத்ர அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கலச பூஜை, மகன்யாச ஜபம், மூலவர் அபிஷேகத்தைத் தொடர்ந்து ருத்ர ஜபம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு வசோர்தாரா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், இரவு 7:30 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.