பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் 13ம் தேதி பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவர் ரங்கநாத பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. 9 மணிக்கு உற்சவர் ரங்கநாத பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.