கிருமாம்பாக்கம் : கிருமாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திருவிழா வரும் 17 ம்தேதி நடக்கிறது. கிருமாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 11ம் தேதி பகாசூரனுக்கு அன்னமளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை 6 மணிக்கு முத்தாலம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 12.30 மணிக்கு அரவான் களபலி, 1 மணிக்கு படுகளமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கரகம் வீதியுலா, தீமிதி விழா மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. 18ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிருமாம்பாக்கம் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பொது மக்கள் செய்கின்றனர்.