ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆண்டு விழா நடந்தது.பாதிரியார் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். காலையில் ஜெபமாலை வழிபாடு, நற்கருணை ஆராதனை நடந்தது. மாலையில் பாதிரியார் அல்வாரஸ் செபாஸ்டின், உதவி பாதிரியார் சின்னத்துரை, பீட்டர் ஆகியோரின் கூட்டு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.