பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
02:06
சந்திர கிரகணத்தையொட்டி இன்று மாலை 6 மணி முதல் கோயில்களில் நடை அடைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை: இன்று சந்திரகிரகணத்தையொட்டி சாயரட்சைகால பூஜை முடிந்து, இரவு 7 மணிக்கு அம்மன், சுவாமி மூலஸ்தான பலகணி கதவுகள் சாத்தப்படும். இந்நேரத்தில் தரிசனமோ, அர்ச்சனை டிக்கெட்டுகளோ கிடையாது.சந்திரகிரகணம் இரவு 11.50 மணிக்கு ஆரம்பித்து இரவு 1.42 மணிக்கு மத்திம காலத்தில் தீர்த்தம் மற்றும் கிரகண கால அபிஷேகம் நடக்கும். அதிகாலை 3.34 மணிக்கு கிரகணம் முடிந்தபின், அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடக்கும். பின், வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கும், என தெரிவித்துள்ளார்.
திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை, நடை சாத்தப்படும் என, தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார். இன்று மாலை 4 மணி முதல், பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்வது நிறுத்தப்படுவதால் , கோவிலில் பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, இன்று காலை முதல் மாலை 4 மணி வரை, தொலை தூர தரிசனம் அமல்படுத்தப்படும். அதே போல் குறிப்பிட்ட நேரத்தை விட, ஒரு மணி நேரம் முன்பாக, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் தொடங்கப்படும்.நித்ய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் சேவைகள் வியாழனன்று ரத்து செய்யப்படுகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றுள்ள பக்தர்களை, இன்று காலை 11.30 மணி வரையிலும், 50 ரூபாய் டிக்கெட் பெற்றுள்ள பக்தர்கள் பிற்பகல் 2 மணி வரையும் அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.இன்று வைகுண்டம் இரண்டாவது வளாகத்தில், இலவச சாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு, பகல் 11.30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.