வடவள்ளி: கோவை வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பால வேளாளக்கவுண்டர்கள், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் ஊரின் காவல் தெய்வமாக கருப்பராயனை ஒரு மரத்தடியில் வைத்து வணங்கி வந்துள்ளனர். பின்னர், கடந்த 80 வருடத்திற்கு முன்னர், அதற்கு மேல் கூரை அமைத்து கோவில் போல வடிவம் கொடுத்து கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், 80 வருடங்களுக்கு பின்னர் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது கும்பாபிஷேகத்திற்கு தயாராகியுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக வழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. முதல் நான்கு நாட்களுக்கு மங்கள இசை நிகழ்ச்சிகளுடன், நான்கு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, ஐந்தாம் நாள் காலை மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.