புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், தை மாத வியாழக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை காக்கிட ஆரத்தி, 12:00 மணிக்கு மதிய ஆரத்தி நடந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.