பதிவு செய்த நாள்
23
ஜன
2015
11:01
மணவாள நகர்:மணவாள நகர் சமர்த்த சாய்பாபா கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.மணவாள நகர், ஒண்டிக்குப்பத்தில் உள்ள சமர்த்த சாய்பாபா கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 21ம் தேதி, காலை 7:30 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமமும், லட்சுமி, நவகிரக ஹோமமும், கிராம தேவதை வழிபாடும் நடந்தது. பின் அன்று மாலை 5:30 மணிக்கு, அங்குரார்ப்பணம் மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தது. பின், நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், விநாயகர் பிரதிஷ்டையும் நடந்தது. நேற்று, காலை 7:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின், காலை 9:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மூலவர் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.