பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
வடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 144வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் பிப்ரவரி 3ம் தேதி நடக்கிறது. தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை தரும சாலையில் மகாமந்திரம் ஓதுதல், 29ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெறும். பிப்ரவரி 2ம் தேதி காலை 5:00 மணிக்கு அகவல் பாராய ணம், 7:30 மணிக்கு தருமசாலை, வள்ளலார் அவதரித்த மருதுார், கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்கக் கொடியேற்றுதல் நடைபெறும். 10:00 மணிக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் முன்னிலையில் சத்திய ஞானசபையில் சன்மார்க்கக் கொடி உயத்துதலும், இரவு 7:00 மணிக்கு திருஅருட்பா க ருத்தரங்கம் மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. 3ம் தேதி காலை 6:00, 10:00 , மதியம் 1:00, இரவு 7:00, 10:00 மணி 4ம் தேதி காலை 5:30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். 3ம் தேதி காலை 7:00 மற்றும் 11:00 மணிக்கு ஊரன் அடிகள் தலைமையில் தருமசாலை மேடையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெறும். 5ம் தேதி சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறும். திரு அறை தரிசனத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் சென்று அங்கு சித்தி பெற்ற அறை முன் வைத்து திருஅறை தரிசனம் மதிய ம்12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை பார்வதிபுரம் கிராம மக்கள், உதவி ஆணையர் ஜோதி, நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் செய்து வருகின்றனர்.