பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே பட்டணம் விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு அடுத்துள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டணம் கிராமத்தில், விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்கள் புதுபிக்கப்பட்டுள்ளன. இதற்கான கும்பாபி?ஷகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 22ம் தேதி மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி, அங்குரர்பணம், ரக்?ஷாபந்தனம், முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தீபராதணையை தொடர்ந்து, 9.50 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர் மூலம் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் நடந்தது. இக்கும்பாபிசேகத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஏழு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்தனர்.
சிங்கையன்புதூர்: கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன்புதூர் கிராமத்தில், கருப்பராய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபி?ஷகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மற்றும் முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தீபராதணையை தொடர்ந்து, 9.45 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர், கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்து வைத்தார்.