பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
புதுச்சேரி:அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில், 15ம் ஆண்டு குரு பூஜை விழா, வரும் 27ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, பாலன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,கோரிமேடு, வீமகவுண்டன்பாளையத்தில் உள்ள, அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில், 15ம் ஆண்டு குரு பூஜை மற்றும் அன்னமளிப்பு விழா, வரும் 27ம் தேதி காலை 6:௦௦ மணி முதல் நடக்கிறது.காலை 8:௦௦ மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 10:30 மணிக்கு பேரொளி வழிபாடு, 10:40 மணிக்கு திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. பகல் 1:௦௦ மணிக்கு, புதிதாக திறக்கப்பட்டுள்ள அன்ன கூடத்தில் அறுசுவை உணவுடன் அன்னமளிப்பு நடக்கிறது என தெரிவித்துள்ளார்.