மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை 6:30 மணிக்கு உற்சவ மூர்த்தி கரிக்கோலம் வீதியுலா, காலை 8:30 மணிக்கு சுதர்சன ஹோமம், தீபாராதனை, மாலை 6:15 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (26ம் தேதி) காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி வீதியுலா நடந்தது. காலை 10:30 மணிக்கு விருத்தாசலம், புவனகிரி, மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கூட்டுப்பி ரார்த்தனை செய்தனர்.