ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகள் ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2015 12:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நிர்வாகம், கட்டடக் கலை குறித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். யு.பி.எஸ்.சி., மூலம் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு நிர்வாகத் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி அகாடமி பேராசிரியர் சுசந்த்கர்வ் தலைமையில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ?? பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகார கட்டட கலை, கோயில் நிர்வாகம் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்த அறிக்கையை பயிற்சி அகாடமியில் கட்டுரையாக சமர்ப்பிப்பர்.