ராமேஸ்வரம் : நேற்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு நேற்று பகல் 1 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் ராமேஸ்வரம் கோயில் நடை அடைக்கப்பட்டது. இரவு 12.30 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் புறப்பட்டு அக்னிதீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று அதிகாலை 3.34 க்கு கிரகணம் முடிந்தது. இதன் பின், சுவாமிக்கு கிரகணாபிஷேகம் நடந்த பின் நடை திறக்கப்பட்டது.