சென்னை: சென்னை ஜவஹர் நகர் ரஜனி ராஜா கோவிலில் 23 ம் தேதி கலை 09 30 மணிக்கு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவானது 20ம் தேதி விநாயகர் ஆராதனையுடன் துவங்கியது. கயிலைமணி நடராஜ சிவாச்சாரியர் மாற்றும், முத்துக்குமார் சிவாச்சாரியர் இவர்களின் மேற்ப்பார்வையில் குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைவுற்றது. விழாவை முன்னிட்டு அபிராமி மண்டலி மகளிர் அணி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கலியன் பொன்அடி கோதண்ட ராமானுஜ தாசன் அவர்களின் இலக்கிய சொற்பொழிவும், மஹாலக்ஷ்மி குழுவினரின் குழந்தைகள் இன்னிசை மற்றும் ஜயந்தி குழுவினார்களின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும் நடை பெற்றது.