திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு புஷ்பவல்லி தாயார் சமேத ÷ தகளீச பெருமாள் சயன அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம் நடந்தது. விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், கண்ணாடி அறையில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சலில் தாயார், பெருமாள் அருள்பாலித்தனர். 8:30 மணிக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. 9:00 மணிக்கு கண்ணாடி அறையில் பெருமாள், தாயார் சயன அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.