முகுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில் பரமகுரு பெருமான் ஸ்ரீமத் சுவாமிகளின் உடைச்சாமி கோயிலில் 4 ம் ஆண்டு வருடாபிஷேகம், சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அரப்போது வேங்கட சுப்பிரமணியன், வெங்கலகுறிச்சி மாணிக்கம், ஜெகதீசன், விளங்குளத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பால்ச்சாமி, கணேசன், ராஜா, சண்முகம், இருளாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.