சிவகாசி : சிவகாசி அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள வீரபாண்டிய அய்யனார் கோயிலில், இந்து நாடார்கள் பேரவை சார்பில் மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. நிறைவு நாளில் சுவாமிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை செயலாளர் சமுத்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.