பதிவு செய்த நாள்
30
ஜன
2015
11:01
குறிச்சி: கோவை, குனியமுத்துாரில், புதுப்பிக்கப்பட்ட நுாறாண்டுகள் பழமையான அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 1ம் தேதி நடக்கிறது. குனியமுத்துாரில், சுண்டக்காமுத்துார் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது, நு ாறாண்டுகளுக்கும் மேல் பழமையான அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், இங்கு, மாவிளக்கு வழிபாடு விழா நடக்கும். தற்போது, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப கிரகத்துடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், மூன்று நிலை கோபுரமும், ஏழு நிலைகளில் முழுக்கற்களால் ஆன, சிலைகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. திசைக்கு இரண்டு என, நான்கு திசைகளுக்கும், எட்டு லட்சுமிகள் வைக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபி÷ ஷக விழா, இன்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை நடக்கிறது. 31ம் தேதி காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, விசேஷசாந்தி, வேதபாராயணம் ஆகியவையும், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கின்றன. 6:00 முதல் 7:30 மணிக்குள், விமான கலசம் வைத்தல், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கின்றன. 1ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம், ஸ்பர்சாஹுதி, தீபாராதனையும், 9:00 மணிக்கு, கலசங்கள் கோவிலை வலம் வருதலும் நடக்கின்றன. 9:15 முதல் 9:30 மணிக்குள் அறம் வளர்த்த மாரியம்மன் விமான கும்பாபிஷேகமும், 9:30 முதல் 10:00 மணிக்குள் அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு( வினாயகர், முருகன், கருப்பராயன்) மகா கும்பாபி÷ ஷகமும் நடக்கின்றன. பிப்., 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.