கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ள சர்வ சித்தி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், வரும் 20ம் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற சர்வசித்தி பஞ்சமுக விநாயகர் கோயில். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி, 19ம் தேதி இரவு சங்கல்பம் மஹா கணபதி பூஜை, புன்னியாக வசனம், வாஸ்து பூஜை, நவ கும்ப ஆராதனை, மங்களார்த்தி தீர்த்த பிரசாதம் விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 20ம் தேதி காலை கணபதி பூஜை, மஹா பூர்ணா ஹூதி நடக்கிறது. காலை 10 மணிக்கு கடக லக்கனத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஹா நெய்வேத்யம் பிரசாத விநியோகம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் கணேசன் மற்றும் பத்மாவதி செல்லப்பன், பிரேமாவதி வடிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.