வால்பாறை : வால்பாறையில் நடந்த பிரதோஷபூஜையில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை, 5.30 மணிக்கு நடந்த பிரதோஷ பூஜையில் சிவலிங்கத்திற்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன.பின்னர் மாலை, 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ரிஷபவாகனத்தில் சிவன், பார்வதியுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.