பதிவு செய்த நாள்
07
பிப்
2015
12:02
சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி முன்னிட்டு திருவிழா நடந்தது. இதில் தென் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் சுவாமிக்கு பொங்கல்வைத்தும், முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர். கார்கள், பஸ்கள், வேன், பாதயாத்திரையாகவும் இருக்கன்குடி வந்தனர். சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சாத்தூர் டி.எஸ்.பி.,குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.