திட்டக்குடி அடுத்த கல்லூர் வழித்துணை முருகன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி பால் காவடிஊர்வலம் மற்றும் அன்னதானம் நடந்தது. திட்டக்குடி அடுத்த கல்லூர் கிராமத்தில் உள்ள வழித்துணை முருகன் கோவிலில் தைப்பூசத்தை யொட்டி காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பங்கேற்ற பால்காவடிஊர்வலம் கிராமத்தின் அனைத்து வீதிகளின் வழியாக சென்றது. கோவில் நிர்வாகி முத்துசாமி, மொட்டையன், ஜோதி, ராமநத்தம்ஊராட்சித் தலைவர் அருள், அன்னதானக்குழு உறுப்பினர்கள் புடையூர் சக்திவேல், சிவபாலமுருகன் சார்பில் மதியம் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.