பதிவு செய்த நாள்
07
பிப்
2015
12:02
புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு ஆனந்தபுரம் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. மாலை 6.00 மணிக்கு கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால ஹோமம் நடந்தது.தொடர்ந்து, நேற்று காலை 7.15 மணியளவில், இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9.30 மணியளவில் கருமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில், முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.