பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவிலில், 38-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, வரும் 17ம் தேதி துவங்குகிறது.
கணபதி பூஜையுடன் துவங்கும் விழாவை தொடர்ந்து, தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. அடுத்த மாதம் 4ம் தேதியன்று, வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவமும், 5ம் தேதியன்று மாசி மக கடல் தீர்த்தவாரியும் நடக்கிறது.
தொடர்ந்து, 6ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 7 ம்தேதி மகா அபிஷேகம், 8 ம் தேதி மஞ்சள் நீர், 9 ம்தேதி பாவாடைராய சுவாமி பள்ளய நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர், ஓய்வு பெற்ற எஸ்.பி.,விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.