பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
மதுராந்தகம்: கருங்குழி பால தண்டாயுதபாணி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண நுாதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.
கருங்குழி பகுதியில் பழமைவாய்ந்த, புகழ்பெற்ற பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புணரமைக்கப்பட்டு, நேற்று ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம்
நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, அனுக்ஞை, கணபதி ஹோமம், பூலோக காமதேனு பூஜை, மாலை 5:00 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேள்வி உள்ளிட்டவையும்; கடந்த 8ம் தேதி காலை 8:00 மணிக்கு தேவர்கள் - ரிஷிகள் ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு தத்துவார்ச்சனை, பூர்ணாஹூதி யாத்ரா தானமும், 9:30 மணிக்கு கடம் புறப்பாட்டை தொடர்ந்து மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் 10:30 மணிக்கு. மஹா தீபாராதனையும், இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.