பதிவு செய்த நாள்
10
பிப்
2015
01:02
கும்பகோணம்:கும்பகோணம், ஆதி கும்பேஸ்வரன் கோவிலில் இளைய மகாமகம் தேரோட்டம் நடத்துவதற்கு, தேருக்கு முகூர்த்தம் நடைபெற்றது.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாக கும்பகோணம் ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவில் திகழ்கிறது.ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசிமக திருவிழா மற்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவின் போது, இக்கோவிலில் உள்ள, ஐந்து தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், ஸ்வாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஸ்வாமிகள் எழுந்தருளி, 2 நாட்கள் தேரோட்டம் நடைபெறும்.
வரும், 2016ம் ஆண்டு மகாமக பெருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஐந்து திருத்தேர்களின் சீரமைப்பு பணி கடந்த, 2013ம் ஆண்டு தொடங்கியது.
வரும் மார்ச், 4ம் தேதி இளையமகாமகம் நடைபெறவுள்ளதால், 3ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதையொட்டி, நேற்று தேர் கட்டுமானப்பணிக்காக முகூர்த்தம் நடைபெற்றது. இதற்காக, தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.